அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.சில அலுவல்களின் காரணமாக வலைப்பூ பக்கம் வரவே முடியவில்லை.
அண்மையில் எங்கள் டவுன்ஷிப்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
விழா நடக்கும் இடத்தின் முகப்பில் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் எளிதாகவும் ரங்கோலி போட திட்டமிட்டோம்.எளிதாக என்ற உடன் எனக்கு தோன்றியது ஸ்டென்சில் வைத்து போட்டு விடலாமே என்றுதான்.
ஸ்டென்சில் என்று நான் சொல்வது நீங்கள் ஊர் பக்கம் நடக்கும் exhibition களில் பார்த்திருக்க கூடும்.கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல மாவு சல்லடைகளில் அழகிய கோலங்கள்,design கள் வரைந்து விற்று கொண்டிருப்பார்கள்.
 |
Image: flicker |
என்னிடம் இது போல ஸ்டென்சில் நான்கு இருந்தது.என் தோழி மீராவிடம் இரண்டு இருந்தது.
கலர் பொடியும் ரெம்பவே எளிதான ஒரு design னும் தயார் செய்து கொண்டோம்.
நான், என் அம்மா,என் தோழிகள் மஞ்சு,மீரா,ராதிகா வும் இணைந்து விழாவிற்கு போட்ட கோலம் உங்கள் பார்வைக்கு.
 |
அம்மா |
வித்தியாசமாக இருந்ததால் அனைவரின் பாராட்டையும் பெற்றது எங்கள் கோலம்.அதோடு மிகவும் குறைந்த நேரமே பிடித்தது.
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.