எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.
1) காகத்திற்கு உணவிடுதல்.
2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல்.
3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல்.
4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல்.
5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல்.
6) மீன்களுக்கு பொரி அளித்தல்.
7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல்.
8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல்.
9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல்.
10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.
Post a Comment Blogger Facebook