0
Beetroot-பீட்ரூட்

அழகிய நிறமும் நிறையசத்துக்களும் கொண்ட காய்பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனைஅனைவரும் விரும்பிஉண்ணுகின்றனர்.

பீட்ரூட்டில் உள்ளகார்போஹைட்ரேட்ஸ்சர்க்கரை துகள்களாகஇருப்பதால் இது  விரைவில்ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட் புற்றுநோய் பரவுவதை தடுக்கும், மலச்சிக்கலைப் போக்கும், பித்தத்தைக் குறைக்கும், அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும், கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்

சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்

பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும்,பிட்ருட் சாறை தண்ணீருடன் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பதாக  அருந்த வேண்டும்

தோல் அரிப்பின் காரணமாக துன்பப்படுபவர்களும் பிட்ருட் ஜூசுடன்  ஒரு பங்கு தண்ணீரை கலந்து தடவினால் வதே அரிப்பு தானாக நின்று விடும்.
புற்று நோயினால் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நோயாளிகள், பிட்ருட் தினமும் 1 டம்ளர் அருகி வந்தால் புற்றுநோய் பரவுவதை தடுக்கலாம்.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்

பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்

பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை 
நீக்கும்.

இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

Post a Comment Blogger

 
Top